நாம் விரும்புகிறோமோ இல்லையோ ஜாதி என்பது இன்று சமுதாயத்தில் தவிர்க்கமுடியாததாக உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் நமது அரசும், அரசியல் வாதிகளும்தான்.ஜாதி அரசு வேலைகளிலும், கல்விகூடங்களிலும் சேர மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.
its relevant- என்று பார்த்தால் ஏதோ தேவை இருக்கத்தானே அது சமுதாயத்தில் நிலைத்து நிற்கிறது
ஜாதியைப்பற்றிய எனது கருத்து என்னவென்றால், ஒருகாலத்தில் அது மக்களை ஒன்றுசேர்க்கவும் பயன்பட்டது, அது ஒரு இனத்தின் குறியீடு எனவும் கொள்ளலாம்.
ஜாதியை இப்போதைக்கு ஒழிக்கமுடியாது என்று எண்ணுகிறேன்
அதை ஒழிக்கவேண்டிய அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை, அதற்கான தேவை குறையும்போது அது தானாகவே மறைந்துவிடும்.
நாம் செய்யவேண்டியது என்றுபார்த்தால்,
- ஜாதி உயர்வு,தாழ்வு பாராட்டுவதை நிறுத்தவேண்டும்
- வீண் ஜாதிபெருமை பேசுவதை நிறுத்தவேண்டும்
- ஒரு ஜாதியினரைப்பற்றிய Prejudice ஐ தவிர்க்க வேண்டும்
- ஜாதியை ஒழிக்கிறேன் என்று ஏதாவது செய்து குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்
- காதலை, காதலாகமட்டும் வைத்துக்கொள்ளலாம் மற்றபடி சமூகமாற்றம், ஜாதி ஒழிப்பு கருவி என்றெல்லாம் காதலைப் பயன்படுத்தினால் அது உண்மையில் காதல் அல்ல ( காரணமில்லாமல் மலர்வதுதானே காதல்?) அது கலவரத்தில் தான் முடியும். ஆனால் பல தமிழ் அறிவு ஜீவிகள் "ஆதலால் காதல் செய்வீர்" என்று முழங்குகின்றனர் அவர்கள் காதலை ஏதோ சாம்பார் செய்வது என நினைத்துக்கொண்டனர். அவர்களுக்கு காது கொடுக்காமல் காததூரம் சென்றுவிட்டால் நல்லது.
- அரசியல் வியாதிகள் ஜாதிபற்றிப் பேசுவதை படிக்கவோ கேட்கவோ வேண்டாம் - P.C.R. போடச்சொல்லி யாரையாவது தூண்டிவிட்டு சமுதாயத்தில் வெறுப்பு குறையாமல் பார்த்துக்கொள்வது இவர்கள்தானே.
- மொத்தத்தில் நாம் மனசாட்சி உள்ள மனிதனாக வாழ்ந்தாலே போதும் நம் வாழ்வில் ஜாதி எனும் விஷயம் குறுக்கிடாமல் பார்த்துக்கொள்ளலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக