எனக்கு கே.வி.கிருஷ்ணவாரியார் பற்றி உண்மையில் ஒன்றும் தெரியாது. வேதங்களில் இடைச்செருகுகள் இருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன்.ஏனென்றால் அவை பயபக்தியுடன் வாய்வழியாக தலைமுறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.(தகுதி உடையவர்க்கு மட்டுமே வேதம் கற்றுத்தரப்பட்டதற்கான காரணம் இப்பொழுது விளங்கியிருக்கும் என எண்ணுகிறேன்).
அடுத்ததாக வேதங்களின் எதாவது ஒரு பாடலின் ஒருவரியைமட்டும் எடுத்துக்கொண்டு அதை ஆராய்வது முறை அல்ல. அதுவும் நாம் ஆராய்வது வேத மந்திரங்களின் மூலத்தை அல்ல அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை. இங்கு மொழிபெயர்த்தவரின் புலமை,மொழிபெயர்ப்பை நாம் புரிந்துகொண்டவிதம், அதை மேற்கோள் காட்டுபவரின் உள்நோக்கம், ஆகியவையும் முக்கியப் பங்கு வகிக்கின்றது.
ஒரு பசு தீர்க்கமுடியாத நோயால் மிகுந்த துன்பத்துடன் இருக்கும்போது, அத் தீராத்துன்பத்தோடு வைத்திருப்பதைவிட அப்பசுவைக் கொன்றுவிடுவது நல்லது என்பேன் - மஹாத்மா காந்தி. இது ஒரு வாக்கியம், இதை, அதி புத்திசாலியான ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளர் "பசுவைக் கொன்றுவிடுவது நல்லது என்பேன் - மஹாத்மா காந்தி"- என மேற்கோள் காட்டி மஹாத்மா பசுக்களைக் கொல்லச்சொன்னார் என்று எழுதினால் அது எப்படிப்பட்டதோ அதைப்போன்றதுதான் இந்தக் குழப்பமும் என்பது எனது கருத்து.
இங்கு அத்தகைய ஒரு சூழல் சொல்லப்பட்டு அது அதர்மம்,விலக்கப்பட்டது என அறிவுறுத்துவதாக நான் புரிந்துகொண்டுள்ளேன். அதுமட்டுமல்ல அந்த பாடலில் அவ்வாறு அழைத்ததாக மட்டும்தான் வருகிறது. அங்கு தவறான உறவு நிகழ்ந்ததாக வரவில்லை.
இப்படி ஒரு தவறை சுட்டிக்காட்டி அதை விலக்கச்சொல்லும்போது, அதனால் அந்தநூலின் புனிதம் எந்தவகையில் கெடும் என்பது எனக்குப் புரியவில்லை.
ரிக்வேதம்,பத்தாவது மண்டலத்தின் பத்தாவது சூக்தம்- ஆங்கில மொழிபெயர்ப்பு உங்கள் பார்வைக்கு.
கூடுதல் தகவல்-
பைபிளில் தந்தை மகள் உறவு பற்றியும் மத்தியகிழக்கு ஆசிய மக்களின் வரலாறுபற்றியும் உள்ள தகவல்களைப்படித்துப்பார்த்து, புண்ணிய பாரதத்தின் நாகரீகத்தையும், மற்ற நாகரீகங்களையும் நீங்கள் ஒப்பிட்டுப்பார்த்துக்கொள்ள முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக